• May 20 2024

தீடீரென மாயமான பல்கலைக்கழக கலைப்பீட மாணவன்..! பொலிஸார் தீவிர விசாரணை samugammedia

Chithra / May 23rd 2023, 8:20 am
image

Advertisement

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அம்பாறை, சேரகம வேரன்கட்டிகொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக விடுதியின் உபவேந்தர் நேற்று முன்தினம் (21) பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு காணாமல் போன மாணவனின் கையடக்கத் தொலைபேசிக்கு பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்த போது அவர் குருநாகல் பிரதேசத்தில் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில் பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் விஜித விஜேகோன் தலைமையில் பேராதனை பொலிஸார் மற்றும் பேராதனை பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


தீடீரென மாயமான பல்கலைக்கழக கலைப்பீட மாணவன். பொலிஸார் தீவிர விசாரணை samugammedia பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அம்பாறை, சேரகம வேரன்கட்டிகொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக விடுதியின் உபவேந்தர் நேற்று முன்தினம் (21) பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இவ்வாறு காணாமல் போன மாணவனின் கையடக்கத் தொலைபேசிக்கு பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்த போது அவர் குருநாகல் பிரதேசத்தில் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.இதன் அடிப்படையில் பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் விஜித விஜேகோன் தலைமையில் பேராதனை பொலிஸார் மற்றும் பேராதனை பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement