உலக சாதனை படைக்கும் நோக்கில் கரையோரத்தின் ஊடாக இலங்கையை சுற்றி பயணித்து வரும் சாதனை வீரர் இன்று(06) பருத்தித்துறை கடற்கரையை வந்தடைந்து வடமராட்சி கரையோரத்தினூடாக பயணித்தை தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சமன் உடுகம சூரி (வயது-52) என்பவர் கடந்த செப்டெம்பர் 08 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் இருந்து சாதனை நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரில் இருந்து ஆரம்பித்து அங்கேயே நிறைவு செய்யும் வகையில் திட்டமிட்டுள்ள நிலையில் இன்று (06) வடமராட்சியை வந்தடைந்துள்ளார்.
தொடர்ந்து வடமராட்சி கரையோரங்களினூடாக யாழ்ப்பாணம் கரையோரத்தை அடைந்து இலங்கையின் மேற்கு கரைவழியே கொழும்பு துறைமுக நகரை சென்றடைந்து நிறைவு செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.