யாழ்ப்பாண ரௌடிகளால் உருவாக்கப்பட்டு வரும் விதம் விதமான வாள்களில் ஒன்றுடன் பயணித்த ஒருவர் இராணுவப் புலனய்வுத்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய், பாற்பண்ணை இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், நேற்று (15) மாலை 6 மணியளவில் இந்த வாள்வெட்டுக்காரன் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
திருநெல்வேலி, காளி கோயிலுக்கு அண்மையாக வசிக்கும் 23 வயதான இளைஞன் ஒருவரே மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற அவரது இடுப்பில் 3 அடி நீளமான வாள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட நபருடன், வாளும் கோப்பாய் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது.
இடுப்பில் வாளை செருகிக்கொண்டு சுற்றித்திரிந்த இளைஞன் மடக்கிப்பிடிப்பு. யாழில் சம்பவம் samugammedia யாழ்ப்பாண ரௌடிகளால் உருவாக்கப்பட்டு வரும் விதம் விதமான வாள்களில் ஒன்றுடன் பயணித்த ஒருவர் இராணுவப் புலனய்வுத்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.கோப்பாய், பாற்பண்ணை இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், நேற்று (15) மாலை 6 மணியளவில் இந்த வாள்வெட்டுக்காரன் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.திருநெல்வேலி, காளி கோயிலுக்கு அண்மையாக வசிக்கும் 23 வயதான இளைஞன் ஒருவரே மடக்கிப் பிடிக்கப்பட்டார்.மோட்டார் சைக்கிளில் சென்ற அவரது இடுப்பில் 3 அடி நீளமான வாள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது.கைது செய்யப்பட்ட நபருடன், வாளும் கோப்பாய் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது.