• May 18 2024

குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Nov 24th 2023, 11:57 am
image

Advertisement

கலேவெல நகரின் மத்தியில் தார் ஏற்றிச் சென்ற பௌசருடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எச்.லோச்சனா காவ்யாஞ்சலி என்ற பத்தொன்பது வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் ஒரு சிறுமி, தாய், தந்தை ஆகியோரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹியத்தகண்டிய சிறிபுர பிரதேசத்தில் இருந்து குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்களுக்கே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை உயிரிழந்த பெண்ணிற்கு நாளை (25) பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.



குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia கலேவெல நகரின் மத்தியில் தார் ஏற்றிச் சென்ற பௌசருடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எச்.லோச்சனா காவ்யாஞ்சலி என்ற பத்தொன்பது வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மேலும் ஒரு சிறுமி, தாய், தந்தை ஆகியோரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காயமடைந்தவர்கள் தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தெஹியத்தகண்டிய சிறிபுர பிரதேசத்தில் இருந்து குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்களுக்கே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதேவேளை உயிரிழந்த பெண்ணிற்கு நாளை (25) பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement