• May 20 2024

அபே ஜனபல கட்சியின் தலைவரைக் கொல்ல சதி! பிரபல பிக்கு மீது முறைப்பாடு..! பொலிஸார் விசாரணை samugammedia

Chithra / Jun 28th 2023, 10:11 am
image

Advertisement

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா படுகொலை செய்வதற்கான சதி தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா, தன்னைப் படுகொலை செய்வதற்கு பிரபலமான பிக்கு ஒருவர் பாதாள உலகக்குழுவொன்றுக்கு ஒப்பந்தமொன்றை வழங்கியிருப்பதாக பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் தான் வசிக்கும் இந்துருவ - கோணகல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு தன்னை படுகொலை செய்ய ஒத்தாசை வழங்கினால் ஐந்து லட்சம் ரூபா தருவதாக குறித்த பிக்கு வாக்களித்துள்ளதாகவும், அதன் ​போில் குறித்த பெண்ணும் இன்னொரு இளைஞரும் சேர்ந்து தன்னை படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் முறைப்பாட்டுக்கு ஆதாரமாக ஒலிப்பதிவு ஒன்றையும், புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் கையளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அபே ஜனபல கட்சியின் தலைவரைக் கொல்ல சதி பிரபல பிக்கு மீது முறைப்பாடு. பொலிஸார் விசாரணை samugammedia அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா படுகொலை செய்வதற்கான சதி தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா, தன்னைப் படுகொலை செய்வதற்கு பிரபலமான பிக்கு ஒருவர் பாதாள உலகக்குழுவொன்றுக்கு ஒப்பந்தமொன்றை வழங்கியிருப்பதாக பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.அத்துடன் தான் வசிக்கும் இந்துருவ - கோணகல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு தன்னை படுகொலை செய்ய ஒத்தாசை வழங்கினால் ஐந்து லட்சம் ரூபா தருவதாக குறித்த பிக்கு வாக்களித்துள்ளதாகவும், அதன் ​போில் குறித்த பெண்ணும் இன்னொரு இளைஞரும் சேர்ந்து தன்னை படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.மேலும் தன் முறைப்பாட்டுக்கு ஆதாரமாக ஒலிப்பதிவு ஒன்றையும், புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் கையளித்துள்ளார்.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement