ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கிறார் எனவும் தமது கொள்கைக்கு முரணாக செயற்பட்டால், அது தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படுமென்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுனவின் மக்களாணை தான் தற்போதும் நடைமுறையில் உள்ளது. ஆகவே, கட்சியின் கொள்கையை அடிப்படையாக கொண்டே ஜனாதிபதி செயற்பட வேண்டும்.
பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டால், அது குறித்து உரிய தீர்மானத்தை எடுப்போம். கட்சியின் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் ஜனாதிபதி எம்முடன் இணக்கமாக செயற்படுகிறார். எக்காரணிகளுக்காகவும் கட்சிக் கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது கட்சிக் கொள்கைக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலில் செயற்பட்டால் அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை: பொதுஜன பெரமுன விடுத்துள்ள அறிவிப்பு samugammedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கிறார் எனவும் தமது கொள்கைக்கு முரணாக செயற்பட்டால், அது தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படுமென்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவின் மக்களாணை தான் தற்போதும் நடைமுறையில் உள்ளது. ஆகவே, கட்சியின் கொள்கையை அடிப்படையாக கொண்டே ஜனாதிபதி செயற்பட வேண்டும்.பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டால், அது குறித்து உரிய தீர்மானத்தை எடுப்போம். கட்சியின் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் ஜனாதிபதி எம்முடன் இணக்கமாக செயற்படுகிறார். எக்காரணிகளுக்காகவும் கட்சிக் கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது கட்சிக் கொள்கைக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலில் செயற்பட்டால் அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.