• Sep 19 2024

போதைப்பொருள் கடத்தியவர்களிடமிருந்து பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார் - அமைச்சர் டக்ளஸ்..! samugammedia

Chithra / Jun 17th 2023, 4:06 pm
image

Advertisement

வடக்கு கிழக்கில் இருந்த அனைத்து போராட்ட இயக்கங்களும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சரி - பிழை என்பதற்கு அப்பால் இயக்கங்கள் எல்லாம் போதைப்பொருள் வியாபாரம் செய்தன என்பது உண்மை. 

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் போதைப்பொருளை விற்றிருக்கின்றார்கள்.

அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தண்டனையும் கொடுத்திருக்கின்றார். 

நாங்கள் ஆயுதம் ஏந்துவதற்கு முன்னர் இருந்த நிலைமைவேறு. 

இப்போது இருக்கின்ற நிலைமை வேறு.

எமது இனத்தை அழிப்பதற்காகத்தான் இங்கு போதைப்பொருள் பரவவிடப்பட்டது என்று சொல்லி நாங்கள் தப்ப முடியாது. 

இயக்கங்கள் அனைத்தும் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டிருந்தன. சில இயக்கங்கள் கப்பல் கப்பலாக போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டன. 

சில இயக்க உறுப்பினர்கள் தனியாகவும் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டனர். நான் இருந்த இயக்கம் போதைப்பொருள் கடத்தவில்லை. 

போதைப்பொருள் கடத்தியவர்களிடமிருந்து நான் பணம் வாங்கியிருக்கின்றேன். போதைப்பொருள் வடக்கில் மாத்திரமல்ல தென்னிலங்கையிலும் காணப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தியவர்களிடமிருந்து பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார் - அமைச்சர் டக்ளஸ். samugammedia வடக்கு கிழக்கில் இருந்த அனைத்து போராட்ட இயக்கங்களும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.சரி - பிழை என்பதற்கு அப்பால் இயக்கங்கள் எல்லாம் போதைப்பொருள் வியாபாரம் செய்தன என்பது உண்மை. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் போதைப்பொருளை விற்றிருக்கின்றார்கள்.அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தண்டனையும் கொடுத்திருக்கின்றார். நாங்கள் ஆயுதம் ஏந்துவதற்கு முன்னர் இருந்த நிலைமைவேறு. இப்போது இருக்கின்ற நிலைமை வேறு.எமது இனத்தை அழிப்பதற்காகத்தான் இங்கு போதைப்பொருள் பரவவிடப்பட்டது என்று சொல்லி நாங்கள் தப்ப முடியாது. இயக்கங்கள் அனைத்தும் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டிருந்தன. சில இயக்கங்கள் கப்பல் கப்பலாக போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டன. சில இயக்க உறுப்பினர்கள் தனியாகவும் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டனர். நான் இருந்த இயக்கம் போதைப்பொருள் கடத்தவில்லை. போதைப்பொருள் கடத்தியவர்களிடமிருந்து நான் பணம் வாங்கியிருக்கின்றேன். போதைப்பொருள் வடக்கில் மாத்திரமல்ல தென்னிலங்கையிலும் காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement