எய்ட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பதன் காரணமாக, பொலநறுவை மாவட்டத்தில் பொது இடங்களில் நிறுவப்படவுள்ள கரும பீடங்கள் மூலம் மாதாந்தம் 50 ஆயிரம் ஆணு றைகளை இலவசமாக வழங்க பொலநறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் இறுதிநாள் வரை பொலநறுவை மாவட்டத்தில் 16 எய்ட்ஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் ஐவர் சிறுவர்கள்.
இந்த அதீத தொற்றுப்பரவலாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.