விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டமானது பயிர்களை பல்வகைப்படுத்துவதற்கு பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையினை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அதேவேளை நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதற்காக 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.