கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம்(13) கேதாரகெளரி அம்பாளின் காப்பு கட்டும் நிகழ்வு யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமான பூசை வழிபாடுகளை தொடர்ந்து காலை 10 மணியளவில் அடியார்களுக்கு கௌரி நோன்பு நூல் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து அடியார்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.