வத்தளையில் 80வயது முதியவரொருவர் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வத்தளை – ஹுனுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 80 வயதான முத்தையாபிள்ளை தேவராஜ் என்பவர் காணாமல் போயுள்ளார்.
அவர் கடந்த 23ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.