மஹியங்கனை - பதியத்தலாவை வீதியிலுள்ள பாலமொன்றுக்கு அருகில் பாரவூர்தி மோதி 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த அவர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ தொடர்பில் மஹஓய பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பாரவூர்தி சாரதியை மஹியங்கனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.