என்.ஆர்.புரா அருகே 14-ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ஜெயபுரா அருகே உள்ள உத்தமேஸ்வரா கிராமத்தில் பழமை வாய்ந்த கல்வெட்டுகள் இருப்பதாக மைசூரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
அதனடிப்படையில், தொல் பொருள் ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த சுரேஷ், கல்லங்கடி என்பவரின் தலைமையில் உத்தமேஸ்வரா கிராமத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்திலிருந்த சாலையோரம் 14-ம் ஆண்டு நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பகல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்ப கல்லை ஆய்வு செய்த பொழுது அந்த கல்வெட்டு 14-ம் நூற்றாண்டை சேர்ந்த திம்மன்னா நாயக்கரின் காலத்தில் பாதிக்கப்பட்டதையும், அவரது வரலாற்றை குறிக்கும் வகையில் சில அடையாளங்கள் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருந்தமையை கண்டுபிடித்துள்ளனர்.
அத்தோடு அவ் கல்வெட்டில், 2 யானைகள் சிவனுக்கு பூஜை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தத்துடன் மேலும் சில கன்னட எழுத்துக்கள் மற்றும் மரணமானவர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வது போன்ற சில உருவங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தது.
சிற்பங்கள் மற்றும் அதிலுள்ள கன்னட எழுத்துகள் வைத்து அங்கு பழங்காலத்தில் கோவில்கள் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சுரேஷ்,
14-ம் ஆண்டு நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு இதுவென்றும், இந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கோவில்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகின்ற அதே வேளை கல்வெட்டுகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் வரலாறும் உள்ளமையால் கல்வெட்டை தொல்லியல் ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
14-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டொன்று கண்டுபிடிப்பு SamugamMedia என்.ஆர்.புரா அருகே 14-ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ஜெயபுரா அருகே உள்ள உத்தமேஸ்வரா கிராமத்தில் பழமை வாய்ந்த கல்வெட்டுகள் இருப்பதாக மைசூரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதனடிப்படையில், தொல் பொருள் ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த சுரேஷ், கல்லங்கடி என்பவரின் தலைமையில் உத்தமேஸ்வரா கிராமத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திலிருந்த சாலையோரம் 14-ம் ஆண்டு நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பகல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்ப கல்லை ஆய்வு செய்த பொழுது அந்த கல்வெட்டு 14-ம் நூற்றாண்டை சேர்ந்த திம்மன்னா நாயக்கரின் காலத்தில் பாதிக்கப்பட்டதையும், அவரது வரலாற்றை குறிக்கும் வகையில் சில அடையாளங்கள் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருந்தமையை கண்டுபிடித்துள்ளனர். அத்தோடு அவ் கல்வெட்டில், 2 யானைகள் சிவனுக்கு பூஜை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தத்துடன் மேலும் சில கன்னட எழுத்துக்கள் மற்றும் மரணமானவர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வது போன்ற சில உருவங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தது. சிற்பங்கள் மற்றும் அதிலுள்ள கன்னட எழுத்துகள் வைத்து அங்கு பழங்காலத்தில் கோவில்கள் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சுரேஷ், 14-ம் ஆண்டு நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு இதுவென்றும், இந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கோவில்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகின்ற அதே வேளை கல்வெட்டுகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் வரலாறும் உள்ளமையால் கல்வெட்டை தொல்லியல் ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.