மன்னம்பிட்டி காட்டுப் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த வயோதிபர் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டால் உயிர் தப்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (6) இரவு 8.40 மணியளவில் வைத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயில் மன்னம்பிட்டிய காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எழும்ப முடியாமல் தண்டவாளத்தில் வயோதிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை அவதானித்த ரயில் சாரதி சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தி வயோதிபரை காப்பாற்றியுள்ளார்.
கடும் போதையில் இரத்தக் காயங்களுடன் இருந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ரயிலில் ஏற்றப்பட்டு மன்னம்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ரயில் சாரதியின் இந்த செயற்பாட்டை அனைவரும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த வயோதிபர் - சாரதியின் சாமர்த்தியத்தால் தப்பிய உயிர் samugammedia மன்னம்பிட்டி காட்டுப் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த வயோதிபர் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டால் உயிர் தப்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (6) இரவு 8.40 மணியளவில் வைத்து இடம்பெற்றுள்ளது.கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ரயில் மன்னம்பிட்டிய காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எழும்ப முடியாமல் தண்டவாளத்தில் வயோதிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை அவதானித்த ரயில் சாரதி சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தி வயோதிபரை காப்பாற்றியுள்ளார்.கடும் போதையில் இரத்தக் காயங்களுடன் இருந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ரயிலில் ஏற்றப்பட்டு மன்னம்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.ரயில் சாரதியின் இந்த செயற்பாட்டை அனைவரும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது