• Sep 19 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மற்றுமொரு மகத்தான பணி!

Sharmi / Dec 12th 2022, 11:46 am
image

Advertisement

வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தின் மூலமாக நாளாந்தம் ஆலயத்திற்கு வரும் அடியவர்களுக்காகவும் ஆலய சூழலில் தங்கியிருக்கும் வயோதிபர்களுக்காகவும் தினந்தோறும் அன்னதானப் பணி இடம்பெற்று வருகின்றது.

அதைவிட  இலங்கையிலுள்ள பல்வேறு இடங்களிலும் சந்நிதியான் ஆச்சிரமத்தினால் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் யாழ் மானிப்பாய் பெரிய தம்பிரான் ஆலயத்தின் சைவபரிபாலன அறநெறி மன்ற மாணவர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஆலய வளாகத்தில் 4 லட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான குடிநீர் சுத்திகரிக்கும் திட்டம் நேற்றுமுன்தினம்(10)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகளால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




சந்நிதியான் ஆச்சிரமத்தின் மற்றுமொரு மகத்தான பணி வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தின் மூலமாக நாளாந்தம் ஆலயத்திற்கு வரும் அடியவர்களுக்காகவும் ஆலய சூழலில் தங்கியிருக்கும் வயோதிபர்களுக்காகவும் தினந்தோறும் அன்னதானப் பணி இடம்பெற்று வருகின்றது.அதைவிட  இலங்கையிலுள்ள பல்வேறு இடங்களிலும் சந்நிதியான் ஆச்சிரமத்தினால் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில் யாழ் மானிப்பாய் பெரிய தம்பிரான் ஆலயத்தின் சைவபரிபாலன அறநெறி மன்ற மாணவர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஆலய வளாகத்தில் 4 லட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான குடிநீர் சுத்திகரிக்கும் திட்டம் நேற்றுமுன்தினம்(10)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.குறித்த திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகளால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement