கத்தார் 2022 கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.
இந்நிலையில், பிரான்ஸ் அணி வீரர்கள் மர்ம காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரையில் குறைந்தது மூன்று வீரர்களுக்கு இந்த காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியாளர் Didier Deschamps இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், முக்கிய வீரர்களான Dayot Upamecano மற்றும் Adrien Rabiot ஆகியோர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடைசியாக இங்கிலாந்து அணியுடன் விளையாடிய பின்னர், ஆடும் வரிசையில் உட்படுத்தப்படவில்லை.
இதேவேளை இவர்கள் மொராக்கோ அணியுடனான அரையிறுதி ஆட்டத்திலும் களமிறக்கப்படவில்லை. தற்போது இருவரும் குணமடைந்து வருகின்றனர்.
மேலும், அர்ஜென்டினா அணியுடனான மோதலுக்கு முன்னர் அனைத்து வீரர்களும் உடல் தகுதி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.”என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மர்ம காய்ச்சல் கத்தார் விளையாட்டு அரங்கங்களில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டிகள் காரணமாக பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது பிரான்ஸ் அணி திறந்தவெளி மைதானங்களில் பயிற்சியை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கும் கால்பந்து இறுதிப் போட்டி: பிரான்ஸ் அணி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து கத்தார் 2022 கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.இந்த இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.இந்நிலையில், பிரான்ஸ் அணி வீரர்கள் மர்ம காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுவரையில் குறைந்தது மூன்று வீரர்களுக்கு இந்த காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பயிற்சியாளர் Didier Deschamps இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், முக்கிய வீரர்களான Dayot Upamecano மற்றும் Adrien Rabiot ஆகியோர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் கடைசியாக இங்கிலாந்து அணியுடன் விளையாடிய பின்னர், ஆடும் வரிசையில் உட்படுத்தப்படவில்லை.இதேவேளை இவர்கள் மொராக்கோ அணியுடனான அரையிறுதி ஆட்டத்திலும் களமிறக்கப்படவில்லை. தற்போது இருவரும் குணமடைந்து வருகின்றனர்.மேலும், அர்ஜென்டினா அணியுடனான மோதலுக்கு முன்னர் அனைத்து வீரர்களும் உடல் தகுதி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.”என குறிப்பிட்டுள்ளார்.இந்த மர்ம காய்ச்சல் கத்தார் விளையாட்டு அரங்கங்களில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டிகள் காரணமாக பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தற்போது பிரான்ஸ் அணி திறந்தவெளி மைதானங்களில் பயிற்சியை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.