• May 04 2024

முடிவுக்கு வருகிறதா இரண்டு விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியல்கள்? SamugamMedia

Tamil nila / Feb 24th 2023, 10:50 pm
image

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய தொடர்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

பல தொலைக்காட்சிகளில், எத்தனையோ சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் சன்டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

 


டிஆர்பி யில் கூட இந்த இரு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் ஒவ்வொரு வாரமும் ரேட்டிங்கில் முட்டி மோதி கொள்கின்றன.


குறிப்பாக  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், இல்லத்தரசிகளை தாண்டி சிறியவர்கள் மற்றும் இளைஞர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இரண்டு சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுவது, இந்த சீரியலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.



சமீபத்தில் தான் 'பாரதி கண்ணம்மா' சீரியல் முடிவடைந்து, 'பாரதி கண்ணம்மா 2' சீரியல் துவங்கப்பட்டது. மேலும், இன்னும் சில புது சீரியல்கள் வர உள்ளதக கூறப்படும் நிலையில், தன்னுடைய தாய் - தந்தையை சேர்ந்து வைக்க போராடிய நாயகியின் கதையை கூறி வரும் மௌன ராகம் 2 மற்றும் தந்தையின் மனதை வென்று, படிப்பிலும், காதலிலும் ஜெயிக்க நினைக்கும் பெண்ணின் கதையை கூறி வரும் 'காற்றுக்கென்ன வேலி' ஆகிய 2  சீரியல்கள் விரைவில் முடிவுக்கு கொண்டு வர சீரியல் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




முடிவுக்கு வருகிறதா இரண்டு விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியல்கள் SamugamMedia விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய தொடர்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல தொலைக்காட்சிகளில், எத்தனையோ சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் சன்டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. டிஆர்பி யில் கூட இந்த இரு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் ஒவ்வொரு வாரமும் ரேட்டிங்கில் முட்டி மோதி கொள்கின்றன.குறிப்பாக  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், இல்லத்தரசிகளை தாண்டி சிறியவர்கள் மற்றும் இளைஞர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இரண்டு சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுவது, இந்த சீரியலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.சமீபத்தில் தான் 'பாரதி கண்ணம்மா' சீரியல் முடிவடைந்து, 'பாரதி கண்ணம்மா 2' சீரியல் துவங்கப்பட்டது. மேலும், இன்னும் சில புது சீரியல்கள் வர உள்ளதக கூறப்படும் நிலையில், தன்னுடைய தாய் - தந்தையை சேர்ந்து வைக்க போராடிய நாயகியின் கதையை கூறி வரும் மௌன ராகம் 2 மற்றும் தந்தையின் மனதை வென்று, படிப்பிலும், காதலிலும் ஜெயிக்க நினைக்கும் பெண்ணின் கதையை கூறி வரும் 'காற்றுக்கென்ன வேலி' ஆகிய 2  சீரியல்கள் விரைவில் முடிவுக்கு கொண்டு வர சீரியல் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement