• May 14 2024

இந்த பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

Sharmi / Dec 6th 2022, 8:32 pm
image

Advertisement

தாமிரம் எனப்படும் செம்பு பாத்திரத்தில் அல்லது போத்தலில் வைத்த தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

தண்ணீரை சுத்திகரிக்கும் ஆற்றல் செம்பு அல்லது தாமிரத்திற்கு உண்டு. பலர் தண்ணீர் சுத்திகரிப்பதற்கு பதிலாக அதனை இயற்கையாக சுத்திகரிக்க செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குடிக்கலாம்.

இரவில் செம்பு பாத்திரம் அல்லது பாட்டிலில் நீரை நிரப்பி வைத்து அது காலை வரை அந்த நீரானது செம்புப் பாத்திரத்தில் இருக்கும்போது அதில் உள்ள காப்பர் அயான்ஸ் எனப்படும் ஒருவகையான திரவம் சிறிய அளவில் நீரில் கலக்கிறது.

இது நீரில் உள்ள பாக்டீரியா வைரஸ் போன்ற நுண் கிருமிகளை அழித்து நீரைச் சுத்திகரிக்கின்றது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள இந்த செம்பு நீர் உடலில் புதிய மற்றும் ஆரோக்கியமான அணுக்களை உருவாக்குவதற்கு துணை புரிகிறது.

தாமிர பாத்திரத்தில் வைத்த நீருக்கு வாதம் மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை உள்ளது.செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

ஆனால் அதை குடிக்கும் முன் சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

முறையாக சுத்தப்படுத்தாத பாத்திரங்கள்

செம்பு பாத்திரங்களை அடிக்கடி கழுவாமல் பயன்படுத்தி வந்தால் அதில் பச்சை நிறத்தில் பாசி போல் படர்வதை காணலாம்.

அந்த பச்சை நிறம் ஒரு வகையான ரசாயனம் காப்பர் பாத்திரமானது தண்ணீர் மற்றும் காற்றுடன் கலந்து காப்பர் கார்பனேட் (CuCO3) என்ற ரசாயனத்தை உருவாக்குகிறது அதனால் தான் செம்பு பாத்திரத்தில் பச்சை நிற படலம் உருவாகிறது.

இந்த காப்பர் கார்பனேட் கெமிக்கல் நீருடன் கலந்து நம் வயிற்றுக்குள் செல்லும் போது வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தர வாய்ப்புள்ளது.

தரையில் வைக்கக் கூடாது

பலர் தூங்குவதற்கு முன் ஒரு செப்பு பாத்திரத்தை தரையில் வைத்து காலையில் எழுந்தவுடன் அதன் தண்ணீரைக் குடிப்பார்கள் ஆனால் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும்.

தாமிர நீரை தரையில் வைக்கக்கூடாது இது ஒரு மர மேசையில் வைக்கப்பட வேண்டும் இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அசிடிட்டி நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்

செப்பு நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆனால் அமிலத்தன்மை கொண்ட நோயாளிகள் தாமிர நீரைக் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நீரின் தாக்கம் அசிடிட்டி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறப்பு

செம்பு நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் சாப்பிட்ட பிறகு தாமிரத்தில் வைத்திருக்கும் தண்ணீரைக் குடிப்பது தீங்கு விளைவிக்கும்.

வெறும் வயிற்றில் செம்புத் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் செரிமானம் நன்மை பயக்கும் உணவுக்குப் பிறகு அதை குடிப்பது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தாமிர பாதித்திரத்தில் நீரை சேமித்து வைக்கும் நேரம்

இந்த நீரைக் குடிப்பதன் மூலம் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமானால் அந்தத் தண்ணீரை ஒரு செப்புப் பாத்திரத்தில் குறைந்தது 8 மணிநேரம் வைத்திருக்க வேண்டும்.

செப்பு பாத்திரத்தில் 48 மணி நேரம் தண்ணீரை சேமித்து வைக்கலாம் எனினும் மேலே கூறியது போல் பாத்திரத்தை அவ்வப்போது முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகின்றது. 

இந்த பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா தாமிரம் எனப்படும் செம்பு பாத்திரத்தில் அல்லது போத்தலில் வைத்த தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.தண்ணீரை சுத்திகரிக்கும் ஆற்றல் செம்பு அல்லது தாமிரத்திற்கு உண்டு. பலர் தண்ணீர் சுத்திகரிப்பதற்கு பதிலாக அதனை இயற்கையாக சுத்திகரிக்க செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குடிக்கலாம்.இரவில் செம்பு பாத்திரம் அல்லது பாட்டிலில் நீரை நிரப்பி வைத்து அது காலை வரை அந்த நீரானது செம்புப் பாத்திரத்தில் இருக்கும்போது அதில் உள்ள காப்பர் அயான்ஸ் எனப்படும் ஒருவகையான திரவம் சிறிய அளவில் நீரில் கலக்கிறது.இது நீரில் உள்ள பாக்டீரியா வைரஸ் போன்ற நுண் கிருமிகளை அழித்து நீரைச் சுத்திகரிக்கின்றது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள இந்த செம்பு நீர் உடலில் புதிய மற்றும் ஆரோக்கியமான அணுக்களை உருவாக்குவதற்கு துணை புரிகிறது.தாமிர பாத்திரத்தில் வைத்த நீருக்கு வாதம் மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை உள்ளது.செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.ஆனால் அதை குடிக்கும் முன் சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.முறையாக சுத்தப்படுத்தாத பாத்திரங்கள்செம்பு பாத்திரங்களை அடிக்கடி கழுவாமல் பயன்படுத்தி வந்தால் அதில் பச்சை நிறத்தில் பாசி போல் படர்வதை காணலாம்.அந்த பச்சை நிறம் ஒரு வகையான ரசாயனம் காப்பர் பாத்திரமானது தண்ணீர் மற்றும் காற்றுடன் கலந்து காப்பர் கார்பனேட் (CuCO3) என்ற ரசாயனத்தை உருவாக்குகிறது அதனால் தான் செம்பு பாத்திரத்தில் பச்சை நிற படலம் உருவாகிறது.இந்த காப்பர் கார்பனேட் கெமிக்கல் நீருடன் கலந்து நம் வயிற்றுக்குள் செல்லும் போது வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தர வாய்ப்புள்ளது.தரையில் வைக்கக் கூடாதுபலர் தூங்குவதற்கு முன் ஒரு செப்பு பாத்திரத்தை தரையில் வைத்து காலையில் எழுந்தவுடன் அதன் தண்ணீரைக் குடிப்பார்கள் ஆனால் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும்.தாமிர நீரை தரையில் வைக்கக்கூடாது இது ஒரு மர மேசையில் வைக்கப்பட வேண்டும் இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.அசிடிட்டி நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்செப்பு நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆனால் அமிலத்தன்மை கொண்ட நோயாளிகள் தாமிர நீரைக் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நீரின் தாக்கம் அசிடிட்டி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறப்புசெம்பு நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் சாப்பிட்ட பிறகு தாமிரத்தில் வைத்திருக்கும் தண்ணீரைக் குடிப்பது தீங்கு விளைவிக்கும்.வெறும் வயிற்றில் செம்புத் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் செரிமானம் நன்மை பயக்கும் உணவுக்குப் பிறகு அதை குடிப்பது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.தாமிர பாதித்திரத்தில் நீரை சேமித்து வைக்கும் நேரம்இந்த நீரைக் குடிப்பதன் மூலம் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமானால் அந்தத் தண்ணீரை ஒரு செப்புப் பாத்திரத்தில் குறைந்தது 8 மணிநேரம் வைத்திருக்க வேண்டும்.செப்பு பாத்திரத்தில் 48 மணி நேரம் தண்ணீரை சேமித்து வைக்கலாம் எனினும் மேலே கூறியது போல் பாத்திரத்தை அவ்வப்போது முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement