பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்பொழுது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் முட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மருதங்கேணி பகுதியில் பரீட்சை ஒழுங்குபடுத்தல் மண்டப வளாகத்தில் கடமையிலிருந்த பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் இன்று காலை வைத்து கைது செய்யப்பட்டார்.
இன்று காலை கைது செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமை தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி கைது செய்யும் நடவடிக்கையை தடுக்க முற்பட்ட போதிலும் பொலிசாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் எம்.பி. - பொலிஸ் பேச்சாளர் வெளியிட்ட முக்கிய தகவல் samugammedia பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்பொழுது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் முட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மருதங்கேணி பகுதியில் பரீட்சை ஒழுங்குபடுத்தல் மண்டப வளாகத்தில் கடமையிலிருந்த பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் இன்று காலை வைத்து கைது செய்யப்பட்டார்.இன்று காலை கைது செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமை தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி கைது செய்யும் நடவடிக்கையை தடுக்க முற்பட்ட போதிலும் பொலிசாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.