ஆப்கானிஸ்தானில் 30 நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதிக்கு வடமேற்கே 40 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று பிற்பகல் 12.11, 12.19, 12.42 ஆகிய நேரங்களில் முறையே 6.1, 5.6, 6.2 என ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கங்களின் மூலம் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.