வடமேற்கு கொலம்பியாவில் பேருந்து ஒன்று மண்சரிவுக்குள் புதையுண்டதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்ததாக அரசாங்க அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால், பியூப்லோ ரிக்கோ மற்றும் சாண்டா சிசிலியா ஆகிய நகரங்களுக்கு இடையிலான வீதியில் இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக மண்சரிவில் இருநது ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், பலியானவர்களில் எட்டு பேர் சிறுவர்கள் என்று அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு, மீட்கப்படும் உடல்கள் கொண்டு வரப்படுவதாக பியூப்லோ ரிகோ நகர முதல்வர் லியோனார்டோ ஃபேபியோ சியாகாமா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் மண்சரிவுக்குள் பேருந்து புதையுண்டதில் 34 பேர் பலி வடமேற்கு கொலம்பியாவில் பேருந்து ஒன்று மண்சரிவுக்குள் புதையுண்டதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்ததாக அரசாங்க அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால், பியூப்லோ ரிக்கோ மற்றும் சாண்டா சிசிலியா ஆகிய நகரங்களுக்கு இடையிலான வீதியில் இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக மண்சரிவில் இருநது ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன், பலியானவர்களில் எட்டு பேர் சிறுவர்கள் என்று அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.நகரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு, மீட்கப்படும் உடல்கள் கொண்டு வரப்படுவதாக பியூப்லோ ரிகோ நகர முதல்வர் லியோனார்டோ ஃபேபியோ சியாகாமா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.