அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என்ற தகவலை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறான தகவல்கள் வெளியான பின்னர் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் தான் நிச்சயம் அவருக்கு ஆதரவை வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.
எனினும் தனது கட்சியிலிருந்து போட்டியிடுவதற்கு பசில் ராஜபக்சவே பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஸிலா ரணிலா ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் 'மொட்டு'க்குள் வெடித்த பிளவு. samugammedia அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என்ற தகவலை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அவ்வாறான தகவல்கள் வெளியான பின்னர் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் தான் நிச்சயம் அவருக்கு ஆதரவை வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.எனினும் தனது கட்சியிலிருந்து போட்டியிடுவதற்கு பசில் ராஜபக்சவே பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏனையவர்கள் பசில் ராஜபக்சவிற்கு விசுவாசமாக காணப்படுகின்றனர்.