• Sep 20 2024

தேயிலை தோட்டத்தில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு! samugammedia

Tamil nila / Apr 29th 2023, 4:30 pm
image

Advertisement

பொகவந்தலாவ, பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட  பொகவந்தலாவ பொகவானை தோட்ட தேயிலை மலையிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த தேயிலை மலைக்கு தொழிலுக்கு சென்ற  78 வயதுடைய முன்று பிள்ளைகளின் தந்தையான செல்லன் ராமசாமி என்பவரே இவ்வாறு சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தொழிலாளி 11ம் இலக்க தேயிலை மலையில் களைபிடுங்கி கொண்டிருந்த வேளையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதணைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

தேயிலை தோட்டத்தில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு samugammedia பொகவந்தலாவ, பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட  பொகவந்தலாவ பொகவானை தோட்ட தேயிலை மலையிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை குறித்த தேயிலை மலைக்கு தொழிலுக்கு சென்ற  78 வயதுடைய முன்று பிள்ளைகளின் தந்தையான செல்லன் ராமசாமி என்பவரே இவ்வாறு சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த தொழிலாளி 11ம் இலக்க தேயிலை மலையில் களைபிடுங்கி கொண்டிருந்த வேளையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதணைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement