வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவுரலுமுல்ல, நந்துங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வெலிவேரிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.