பிரித்தானிய மன்னர் சார்ல்ஸிற்கு மீண்டும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் உள்ளதா என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லண்டனில் அவரை சந்தித்தவேளை ஜனாதிபதி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
மீண்டுமொருமுறை இலங்கை வருகின்றீர்களா நான் உங்களிற்கு அழைப்பு விடுக்கலாமா என ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க, மன்னர் சார்ல்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு மன்னர் சார்ல்ஸ் சாதகமாக பதிலளித்துள்ளார்.