அமெரிக்காவில், தந்தையின் துப்பாக்கியை வைத்து தம்பியை அண்ணன் சுட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள வால்மார்ட் கடைக்கு தாயுடன் இரண்டு மகன்கள் சென்றிருந்தனர். அப்போது அவர்களுடைய தாய், கடைக்குள் பொருள்கள் வாங்க சென்றிருந்தார்.
குறித்த அந்த சமயத்தில் ஒரு சிறுவன் காருக்குள் இருக்கும் துப்பாக்கியை பார்த்துள்ளான்.பின்பு, அந்த 14 வயது சிறுவன் அதனை தவறுதலாக அழுத்திய போது தனது தம்பியை சுட்டுவிட்டான்.
துப்பாக்கி சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் அவசர உதவி எண் 911யை அழைத்து தகவலை தெரிவித்தனர். பின்பு, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனுக்கு முதலுதவி அளித்தனர். தோட்டா பாய்ந்த இடத்தில ரத்தம் வெளியேறியதால் அதனை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் ஓக்லஹோமா பல்கலைக்கழக சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது சிறுவன் நலமாக உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு சிறுவர்களும் ஓக்லஹோமா காவல் துறை அதிகாரியின் மகன்கள் என்றும், இதில் பயன்படுத்தப்படாத துப்பாக்கி அவருடையது தான் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் அவர் இல்லை என்றும் தகவல்கள் வந்துள்ளன.
தந்தையின் துப்பாக்கியை வைத்து தம்பியை சுட்ட அண்ணன் samugammedia அமெரிக்காவில், தந்தையின் துப்பாக்கியை வைத்து தம்பியை அண்ணன் சுட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள வால்மார்ட் கடைக்கு தாயுடன் இரண்டு மகன்கள் சென்றிருந்தனர். அப்போது அவர்களுடைய தாய், கடைக்குள் பொருள்கள் வாங்க சென்றிருந்தார்.குறித்த அந்த சமயத்தில் ஒரு சிறுவன் காருக்குள் இருக்கும் துப்பாக்கியை பார்த்துள்ளான்.பின்பு, அந்த 14 வயது சிறுவன் அதனை தவறுதலாக அழுத்திய போது தனது தம்பியை சுட்டுவிட்டான்.துப்பாக்கி சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் அவசர உதவி எண் 911யை அழைத்து தகவலை தெரிவித்தனர். பின்பு, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனுக்கு முதலுதவி அளித்தனர். தோட்டா பாய்ந்த இடத்தில ரத்தம் வெளியேறியதால் அதனை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.மேலும் சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் ஓக்லஹோமா பல்கலைக்கழக சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது சிறுவன் நலமாக உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.இரண்டு சிறுவர்களும் ஓக்லஹோமா காவல் துறை அதிகாரியின் மகன்கள் என்றும், இதில் பயன்படுத்தப்படாத துப்பாக்கி அவருடையது தான் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் அவர் இல்லை என்றும் தகவல்கள் வந்துள்ளன.