ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதன்படி ஊழியர் சேமலாப நிதிக்கான குறைந்தபட்ச வட்டி வீதத்தை 9 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு (2023-2026) இந்த வட்டி வீதமே பேணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.