கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா விதிக்கும் வரிகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள வணிக மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் டொரொண்டோவில் ஒரு நாள் உச்சிமாநாட்டினை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
எல்லை மற்றும் குற்ற அமுலாக்கத்தில் சலுகைகளுக்கு ஈடாக கனேடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதை 30 நாட்களுக்கு தாமதப்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
இதேவேளை கனடாவின் 75% ஏற்றுமதிகளும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது என்பதால் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் குறித்த மாநாட்டினை அவர் நடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த உச்சிமாநாட்டில் வணிகத் தலைவர்கள், தொழில்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும் கனேடிய பிரதமர் அலுவலகம் இதில் பங்கேற்க தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை.
இந்நிலையில் குறித்த உச்சிமாநாடு, அமெரிக்கா சார்ந்த பொருளாதாரத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையை குறைத்து, கனடாவுக்கென தனி வளர்ச்சிப் பாதை உருவாக்கும் முயற்சியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொருளாதார உச்சிமா நாட்டை நடத்தும் கனடா கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா விதிக்கும் வரிகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள வணிக மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் டொரொண்டோவில் ஒரு நாள் உச்சிமாநாட்டினை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.எல்லை மற்றும் குற்ற அமுலாக்கத்தில் சலுகைகளுக்கு ஈடாக கனேடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதை 30 நாட்களுக்கு தாமதப்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று தெரிவித்தார்.இதேவேளை கனடாவின் 75% ஏற்றுமதிகளும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது என்பதால் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் குறித்த மாநாட்டினை அவர் நடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கங்கள்1. உள்நாட்டு வணிக தடைகளை குறைத்தல்.2. ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்துதல்.3. தொழில்துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்த்தல்.4. நீண்ட அனுமதி செயல்முறைகளை சீர்செய்தல்5. அலுமினியத்தை ஐரோப்பாவிற்கு திருப்பிவிடத் தீர்மானித்துள்ளமைஇதேவேளை இந்த உச்சிமாநாட்டில் வணிகத் தலைவர்கள், தொழில்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும் கனேடிய பிரதமர் அலுவலகம் இதில் பங்கேற்க தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை.இந்நிலையில் குறித்த உச்சிமாநாடு, அமெரிக்கா சார்ந்த பொருளாதாரத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையை குறைத்து, கனடாவுக்கென தனி வளர்ச்சிப் பாதை உருவாக்கும் முயற்சியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.