வட மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அண்மைய நாட்களில் வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத கால்நடைகள் வடக்கு மாகாணத்தில் இறந்துள்ளன.
இறந்த கால்நடைகளை அதற்குரிய மரியாதையை வழங்கி உரிய முறையில் அடக்கம் செய்வதினை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன்.
ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் கால்நடை வளர்ப்பார்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.