கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா இன்றையதினம்(16) காலை நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரனும் கலந்து கொண்டனர்.
இதேவேளை கலாசாலையின் முன்னாள் அதிபர்களான வே.கா. கணபதிப்பிள்ளை, வீ. கருணலிங்கம், யாழ்ப்பாண வலய கல்வி பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன், யாழ் மாநகர முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.