அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிங்கள மொழி கற்கை நெறி நிகழ்வின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அரச கருமமொழிகள் வாரம் 01.07. 2023, தொடக்கம் 05.07.2023 வரை நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அரச கரும மொழிகள் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு அரச கரும மொழிகள் திணைக்களத்தில் சிரேஸ்ட உதவிச் செயலாளர் எஸ.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிங்கள கற்க நெறியை முடித்த 82 அரச திணைக்கள உத்தியோத்தர்களுக்கான சான்றிழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.