இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்டு வருகிற இலவச இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்றையதினம்(20) யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண இந்து பௌத்த பேரவை தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றறு.
இந்து பௌத்த பேரவையின் பொதுச்செயலாளர் தேசமாணிய எம் டி எஸ் இராமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இரண்டாம் மொழி கற்கை பூர்த்தி செய்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சிரேஷ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.