ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த நிலைப்பாட்டையும் மாற்றக்கூடாது என கட்சியின் மத்திய குழு நேற்று தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை சிறிது சிறிதாக முன்னோக்கி கொண்டு வருவதற்கு கட்சியின் தற்போதைய தலைவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதால், அந்தத் தலைவர்களுக்கு முன்னோக்கிய பணிகளைத் தொடரும் பலம் இருப்பதாக மத்திய குழுவில் கலந்து கொண்ட கட்சியின் சிரேஷ்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கட்சியின் பிரதித் தலைவர் பதவி அல்லது பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையும் மத்திய குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் பதவிகளில் தற்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு உரையாற்றிய வஜிர அபேவர்தன, அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒன்றாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் samugammedia ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த நிலைப்பாட்டையும் மாற்றக்கூடாது என கட்சியின் மத்திய குழு நேற்று தீர்மானித்துள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியை சிறிது சிறிதாக முன்னோக்கி கொண்டு வருவதற்கு கட்சியின் தற்போதைய தலைவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதால், அந்தத் தலைவர்களுக்கு முன்னோக்கிய பணிகளைத் தொடரும் பலம் இருப்பதாக மத்திய குழுவில் கலந்து கொண்ட கட்சியின் சிரேஷ்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கட்சியின் பிரதித் தலைவர் பதவி அல்லது பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையும் மத்திய குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் பதவிகளில் தற்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு உரையாற்றிய வஜிர அபேவர்தன, அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒன்றாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றார்.