• May 19 2024

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் குழப்பம்...! சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றிய பொலிசார்...!samugammedia

Sharmi / Nov 27th 2023, 2:48 pm
image

Advertisement

முல்லைத்தீவு  மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீதி ஓரத்திலே கட்டப்பட்டிருந்த சிவப்பு  மஞ்சள் கொடிகளை பொலிசார் அகற்றிய நிலையில்  அங்குள்ள மக்கள் ஆத்திரமடைந்து பொலிசாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் துயிலும் இல்ல காணியானது யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்தின் 24 வது எஸ் எல் என் ஜி படையினரால்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த துயிலும் இல்லத்தில்  மக்கள் நின்மதியாக அஞ்சலி செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்

இவ்வாறான பின்னணியில் துயிலுமில்ல காணியிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு மக்கள் கோரி வருகின்ற நிலைமையில் இராணுவத்தினர் வெளியேறாத நிலையில் வீதி ஓரத்திலேயே மக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்

இவ்வாறான நிலையில் துயிலும் இல்ல காணியானது தனியார் காணியாக காணப்படுகின்ற நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பில்  இல்லாதிருந்த ஒரு பகுதி காணியை  தனிநபர் ஒருவர் காணி உரிமையாளரிடருந்து பெற்று வர்த்தக நிலையமொன்றை   அமைத்து நடாத்தி வருகிறார்.  இதற்கும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருவதோடு துயிலுமில்ல காணியில் இருந்து இராணுவம் மற்றும்  வர்த்தக நிலையம் அமைத்த தனிநபர் ஆகியோரை வெளியேறி காணியை துயிலுமில்லத்துக்கு வழங்குமாறு கோரி போராடிவருகின்றனர்

இவ்வாறான நிலையில் இம்முறை 2023 தமிழ் தேசிய மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்தபோது  இந்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக கொடிகளை கட்டி விளக்குகள் வைக்க வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுடன் வர்த்தக நிலைய உரிமையாளர்  முரண்பட்ட நிலையில்  பணிக்குழுவினருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது

இதன் அடிப்படையில் தருணம் பார்த்திருந்த பொலிசார் அங்கு வருகை தந்து  இரண்டு தரப்பினை  சேர்ந்தவர்களிலும் சிலரை பொலிஸ் நிலையம் அழைத்து வந்ததோடு குறித்த இடத்தில்   இருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை பொலிசார் அகற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த  மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு தருணம் பார்த்திருந்த  பொலிசார் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த அலங்காரத்தை சிதைத்து மக்கள் மத்தியில்  விசனத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக இந்த தனி நபர் மீதும் அங்குள்ள மக்கள் தங்களது விஷங்களை வெளியிடுகின்றனர். தங்களுடைய மக்களின் உரிமைக்காக போராடிய இந்த மாவீரர்களை வழிபடுவதை தடுப்பதற்கு  இவ்வாறான எம்மவர்களும் துணை போகின்ற செயற்பாடுகளுக்கு அவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்

இவ்வாறான நிலையில் பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டவர்களில் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவை சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்  

எது எவ்வாறியிருப்பினும் 2023 தமிழ் தேசிய மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும்  பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பணிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.




அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் குழப்பம். சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றிய பொலிசார்.samugammedia முல்லைத்தீவு  மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீதி ஓரத்திலே கட்டப்பட்டிருந்த சிவப்பு  மஞ்சள் கொடிகளை பொலிசார் அகற்றிய நிலையில்  அங்குள்ள மக்கள் ஆத்திரமடைந்து பொலிசாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் துயிலும் இல்ல காணியானது யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்தின் 24 வது எஸ் எல் என் ஜி படையினரால்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த துயிலும் இல்லத்தில்  மக்கள் நின்மதியாக அஞ்சலி செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்இவ்வாறான பின்னணியில் துயிலுமில்ல காணியிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு மக்கள் கோரி வருகின்ற நிலைமையில் இராணுவத்தினர் வெளியேறாத நிலையில் வீதி ஓரத்திலேயே மக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்இவ்வாறான நிலையில் துயிலும் இல்ல காணியானது தனியார் காணியாக காணப்படுகின்ற நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பில்  இல்லாதிருந்த ஒரு பகுதி காணியை  தனிநபர் ஒருவர் காணி உரிமையாளரிடருந்து பெற்று வர்த்தக நிலையமொன்றை   அமைத்து நடாத்தி வருகிறார்.  இதற்கும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருவதோடு துயிலுமில்ல காணியில் இருந்து இராணுவம் மற்றும்  வர்த்தக நிலையம் அமைத்த தனிநபர் ஆகியோரை வெளியேறி காணியை துயிலுமில்லத்துக்கு வழங்குமாறு கோரி போராடிவருகின்றனர்இவ்வாறான நிலையில் இம்முறை 2023 தமிழ் தேசிய மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்தபோது  இந்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக கொடிகளை கட்டி விளக்குகள் வைக்க வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுடன் வர்த்தக நிலைய உரிமையாளர்  முரண்பட்ட நிலையில்  பணிக்குழுவினருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளதுஇதன் அடிப்படையில் தருணம் பார்த்திருந்த பொலிசார் அங்கு வருகை தந்து  இரண்டு தரப்பினை  சேர்ந்தவர்களிலும் சிலரை பொலிஸ் நிலையம் அழைத்து வந்ததோடு குறித்த இடத்தில்   இருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை பொலிசார் அகற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த  மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு தருணம் பார்த்திருந்த  பொலிசார் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த அலங்காரத்தை சிதைத்து மக்கள் மத்தியில்  விசனத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக இந்த தனி நபர் மீதும் அங்குள்ள மக்கள் தங்களது விஷங்களை வெளியிடுகின்றனர். தங்களுடைய மக்களின் உரிமைக்காக போராடிய இந்த மாவீரர்களை வழிபடுவதை தடுப்பதற்கு  இவ்வாறான எம்மவர்களும் துணை போகின்ற செயற்பாடுகளுக்கு அவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்இவ்வாறான நிலையில் பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டவர்களில் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவை சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்  எது எவ்வாறியிருப்பினும் 2023 தமிழ் தேசிய மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும்  பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பணிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement