யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் இல்லங்கள் தொடர்பாக உரிய கண்காணிப்பை மேற்கொள்ள யாழ் மாவட்ட செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.
ஒரு சில சிறுவர் இல்லங்கள் மாவட்ட செயலக அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதில்லை என சுட்டிக் காட்டப்பட்டது.