திருகோணமலை, மனையா வழியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும், சமுத்திரா கம மீனவர்களுக்கும் இடையில் இன்று மாலை முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழ் மீனவர்கள் வலை வீசிக்கொண்டிருந்தபோது அவர்களது வலையை வெட்டியதாக திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சமுத்திர கம பகுதியைச் சேர்ந்த 6 பெரும்பாண்மையின மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது அவர்களது வாக்கு மூலம் பதியப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.