வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து வருடந்தோறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நோக்கி முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை நேற்றையதினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தது.
கடந்த 7 திகதி வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாவான சாமி அம்மா தலைமையிலான பாதயாத்திரையே நேற்றையதினம் நல்லூரை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.