• May 19 2024

மகனுடன் முரண்பாடு - வீடு புகுந்து தாக்கிய கும்பலம் - தந்தை பலி! தாய் படுகாயம்! samugammedia

Chithra / Jul 24th 2023, 2:32 pm
image

Advertisement

தங்காலை, குடாவெல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த சிலர் வீட்டின் உரிமையாளரை கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் . 

உயிரிழந்தவரின் மனைவியும் வெட்டுக்காயங்களுடன் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் நகுலோகம பகுதியை சேர்ந்த 64 வயதுடைய சரத் ரோஹன எனவும் காயமடைந்தவர் 61 வயதுடைய அவரது மனைவி எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

நகுலோகம குடுவெல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றக்கிழமை (23 ) இடம்பெற்ற இசைநிகழ்ச்சியின்போது உயிரிழந்தவரின் மகனுக்கும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த  ஒருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதன் பின்னர்  உயிரிழந்தவரின் மகன் இசைநிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போது அவரை தேடி சிலர் வீட்டுக்குச்  சென்றுள்ளனர்.

அப்போது உயிரிழந்தவரின் மகன் வீட்டுக்கு வராத நிலையில் குறித்த நபர்கள் அவரது தாயையும் தந்தையையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில்  தெரிய வந்துள்ளது. 

குறித்த சம்பவத்துடன் தொடர்படைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


மகனுடன் முரண்பாடு - வீடு புகுந்து தாக்கிய கும்பலம் - தந்தை பலி தாய் படுகாயம் samugammedia தங்காலை, குடாவெல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த சிலர் வீட்டின் உரிமையாளரை கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் . உயிரிழந்தவரின் மனைவியும் வெட்டுக்காயங்களுடன் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் நகுலோகம பகுதியை சேர்ந்த 64 வயதுடைய சரத் ரோஹன எனவும் காயமடைந்தவர் 61 வயதுடைய அவரது மனைவி எனவும் பொலிஸார் தெரிவித்தனர். நகுலோகம குடுவெல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றக்கிழமை (23 ) இடம்பெற்ற இசைநிகழ்ச்சியின்போது உயிரிழந்தவரின் மகனுக்கும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த  ஒருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர்  உயிரிழந்தவரின் மகன் இசைநிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போது அவரை தேடி சிலர் வீட்டுக்குச்  சென்றுள்ளனர்.அப்போது உயிரிழந்தவரின் மகன் வீட்டுக்கு வராத நிலையில் குறித்த நபர்கள் அவரது தாயையும் தந்தையையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில்  தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்படைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement