ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு நாளை(03) நடைபெறுகின்றது. இதன்போது பதவிநிலையில் எவ்வித மாற்றமும் வராது. அது தொடர்பில் கட்சியின் நிறைவேற்றுக்குழுதான் தீர்மானம் எடுக்கும்.
கட்சிக்குள் குழப்பம் எதுவும் இல்லை. ஒற்றுமையாகவே இருக்கின்றோம். பிளவு என்பது உருவாக்கப்பட்ட கதையாகும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை எனவும் மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.