வடமேற்கு பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன.
மதரஸாவில் இருந்து நேற்றைய தினம் (29.01.2023) 25 முதல் 30 மாணவர்களுடன் பயணம் செய்த படகே இவ்வாறு அனர்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
பலியாகிய சிறுவர்கள் 7-14 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 பேர் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக சுமை காரணமாக குறித்த படகு கவிழ்ந்திருக்கலாம் என விசாரணைகளில் தெரிவி க்கப்பட்டுள்ளது..
அதே வேளை, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஜூலை 18ஆம் திகதி சிந்து ஆற்றின் குறுக்கே திருமண விழாவுக்கு சென்ற படகும் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பல பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.