• May 20 2024

தொடரும் துப்பாக்கிச்சூடு..! கொஸ்கொடவில் ஒருவர் உயிரிழப்பு..!samugammedia

Sharmi / Jun 21st 2023, 9:10 am
image

Advertisement

கொஸ்கொட ஹித்தருவா பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகத் தலைவர் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரான கொஸ்கொட ரன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

ரத்கம உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் துப்பாக்கிச்சூடு. கொஸ்கொடவில் ஒருவர் உயிரிழப்பு.samugammedia கொஸ்கொட ஹித்தருவா பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகத் தலைவர் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரான கொஸ்கொட ரன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அவர் வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இரு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  ரத்கம உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement