பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் 94வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவர் இந்திஇ மராத்தி மொழி படங்களில் நடித்து புகழ்ப் பெற்றவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மராத்தி சினிமா உலகின் தாய் என்று அழைக்கப்படுபவர் சுலோச்சனா லட்கர். 1946ம் ஆண்டு மராத்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சுலோச்சனா. முதலில் மராத்தி மொழி படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், பின்னர் இந்தி திரையுலகிலும் தடம் பதிக்கத் தொடங்கினார். அதன்படி, இரண்டு மொழிகளிலும் சேர்த்து இதுவரை 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
திரையுலகில் சுலோச்சனா செய்த சாதனைகளை பாராட்டி அவருக்கு மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கப்பட்டது. அதேபோல், மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகை சுலோச்சனா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது மூப்பு காரணமாக மூச்சு விடுவதில் அவருக்கு பிரச்சினை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுலோச்சனா நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
நடிகை சுலோச்சனாவின் இறுதிச் சடங்கு இன்று(5) மாலை 5.30 மணிக்கு தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நடிகை சுலோச்சனாவின் மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகில் தொடரும் இழப்பு. மற்றுமொரு பழம்பெரும் நடிகை மறைவு.திரையுலகினர் கண்ணீர் அஞ்சலிsamugammedia பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் 94வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் இந்திஇ மராத்தி மொழி படங்களில் நடித்து புகழ்ப் பெற்றவராவார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மராத்தி சினிமா உலகின் தாய் என்று அழைக்கப்படுபவர் சுலோச்சனா லட்கர். 1946ம் ஆண்டு மராத்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சுலோச்சனா. முதலில் மராத்தி மொழி படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், பின்னர் இந்தி திரையுலகிலும் தடம் பதிக்கத் தொடங்கினார். அதன்படி, இரண்டு மொழிகளிலும் சேர்த்து இதுவரை 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.திரையுலகில் சுலோச்சனா செய்த சாதனைகளை பாராட்டி அவருக்கு மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கப்பட்டது. அதேபோல், மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகை சுலோச்சனா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது மூப்பு காரணமாக மூச்சு விடுவதில் அவருக்கு பிரச்சினை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுலோச்சனா நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.நடிகை சுலோச்சனாவின் இறுதிச் சடங்கு இன்று(5) மாலை 5.30 மணிக்கு தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகை சுலோச்சனாவின் மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.