தங்காலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மெலும் தெரியவருவதாவது,
தங்காலை, குடுவெல்ல - நகுலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் அவருடைய வீட்டில் தங்கியிருந்த போதே குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.