நாட்டின் விவசாயத்துறையை வளப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய அரபு ராச்சியம் தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவை சந்தித்த போதே ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலீட் அல் அமீர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை கோப்பி செய்கையை விஸ்தரிப்பதற்கான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.