• Apr 28 2024

இலங்கையின் பிரபல யூடியூப் செனலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! samugammedia

Chithra / Apr 27th 2023, 12:33 pm
image

Advertisement

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகம் மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒருவரின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் ‘யூடியூப்’ காணொளிகளை ஒளிபரப்புவதைத் தடுக்கும் வகையில், சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலதிக மன்றாடியார் நாயகம் உட்பட சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதவான் பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த தடை உத்தரவுகளும் எதிர்வரும் மே 10 வரை அமுலில் இருக்கும் என்றும் நீதிபதி தமது உத்தரவில் அறிவித்தார்.

சமூக ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்படும் ஒரு தலைப்பான எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவுக்கான இழப்பீடு குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை இந்த உத்தரவு தடுக்கிறது.

கடந்த 20 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பாக தவறான தகவல்களை உள்ளடக்கிய காணொளியை பிரதிவாதி தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒளிபரப்பியதாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

இழப்பீடு தொகையாக பாதிக்கப்பட்ட இருவருக்கு 500 மில்லியன் ரூபா வீதம், ஒரு பில்லியன் ரூபாவை நட்டஈடாகவும் நீதிமன்றில் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இலங்கையின் பிரபல யூடியூப் செனலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு samugammedia சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகம் மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒருவரின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் ‘யூடியூப்’ காணொளிகளை ஒளிபரப்புவதைத் தடுக்கும் வகையில், சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலதிக மன்றாடியார் நாயகம் உட்பட சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதவான் பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.இந்த தடை உத்தரவுகளும் எதிர்வரும் மே 10 வரை அமுலில் இருக்கும் என்றும் நீதிபதி தமது உத்தரவில் அறிவித்தார்.சமூக ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்படும் ஒரு தலைப்பான எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவுக்கான இழப்பீடு குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை இந்த உத்தரவு தடுக்கிறது.கடந்த 20 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பாக தவறான தகவல்களை உள்ளடக்கிய காணொளியை பிரதிவாதி தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒளிபரப்பியதாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.இழப்பீடு தொகையாக பாதிக்கப்பட்ட இருவருக்கு 500 மில்லியன் ரூபா வீதம், ஒரு பில்லியன் ரூபாவை நட்டஈடாகவும் நீதிமன்றில் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement