திரப்பனை லபுனொறுவ காப்பகத்தில் உள்ள யானை ஒன்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் குழுவொன்று நாட்டுக்கு வரவுள்ளதாக அநுராதபுரம் வனவிலங்கு வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 அடி உயரம் கொண்ட சுமார் 40 வயதான இந்த யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி முன் இடது காலில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், இந்த யானைக்கு சுமார் மூன்று மாதங்களாக கால்நடை வைத்தியர்களால் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் இதுவரை காயம் குணமாகவில்லை என கால்நடை வைத்தியர் சந்தன ஜயசிங்க தெரிவித்தார்.
எனவே, யானைக்கு மேலதிக சிகிச்சை அளிப்பதற்காக வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெற்ற வைத்தியர்களை வரவழைக்க வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.