• May 03 2024

மருந்து ஒவ்வாமையால் மரணம் - விசாரணைக்கு அழைக்கப்பட்ட முக்கிய கூட்டமைப்பு samugammedia

Chithra / Jul 25th 2023, 8:49 am
image

Advertisement

மருந்து ஒவ்வாமையினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மறுதினம் முன்னிலையாகுமாறு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார தரப்பினர் ஊடகங்களுக்கு கருத்துரைப்பதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று நேற்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.


மருந்து ஒவ்வாமையால் மரணம் - விசாரணைக்கு அழைக்கப்பட்ட முக்கிய கூட்டமைப்பு samugammedia மருந்து ஒவ்வாமையினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாளை மறுதினம் முன்னிலையாகுமாறு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ தெரிவித்தார்.இதேவேளை, சுகாதார தரப்பினர் ஊடகங்களுக்கு கருத்துரைப்பதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று நேற்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement