உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக இருவரும் பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளனர் என்றார்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறான சூழலில் தேர்தல் தொடர்பான விவாதங்கள் நடைபெறுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.