"ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைத்தல்" செயற்திட்டத்தின் திருகோணமலையைச் சேர்ந்த கீழ் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான Digital Media மற்றும் Reporting & Documentation தொடர்பிலான இரண்டு நாள் பயிற்சி நெறியின் முதல்நாள் நிகழ்வு இன்று (09) திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஆரம்பமானது.
அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பயிற்சி நெறியின் வளவாளராக எம்.மிருனாளன் கலந்துகொண்டு பயிற்சியாளர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.
இரண்டாவது நாளாக நாளையும் இப் பயிற்சிநெறி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.