வட மாகாண 'டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள்' கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
2016 ஆண்டு முதல் வட மாகாணத்தில் 82 டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு 22 ஆயிரம் ரூபா வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிற போதிலும் அதில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வட மாகாண பிரதம செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவிடம் இதன்போது மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகைதந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களோடு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.